
சமீபகாலமாக இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் நான்கு வயது குழந்தை ஒன்றை நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதேபோல், தமிழகத்தின் வேறு பகுதிகளிலும், குறிப்பாக ஆம்பூர் நகராட்சியில், நாய் கடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது மக்களில் பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் ஒரு நபரை நாய் கடித்ததில், அவருக்கு பாதி உதடு அறுந்து போனது போன்ற கொடூரமான தாக்குதல் நடக்க, பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் பலமுறை நகராட்சி அலுவலர்களிடம் புகார்கள் கொடுத்தும், எந்த தீர்வும் காணப்படவில்லை என்பது மக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
View this post on Instagram
“>
உடனடியாக தெருநாய்கள் அட்டகாசம் கட்டுப்பாட்டுக்குள் வர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக நகராட்சி அதிகாரிகள் எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இல்லையெனில், இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் மேலும் அரங்கேறும் அபாயம் உள்ளது.