சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உயிரியல் பூங்காவில் புலி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது சில சுற்றுலாப் பயணிகள் புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கியுள்ளனர். இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

புலியின் ரோமம் தீய சக்திகளை அகற்றும் என அந்த நாட்டில் நம்பப்படுவதால் சுற்றுலா பயணிகள் இவ்வாறு செய்துள்ளனர். இதனால் விலங்குகள் துன்புறுத்தப்படுகிறது. இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என பூங்கா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.