தமிழில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் குறித்து மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின்படி 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த சீரியலாக ‘எதிர்நீச்சல்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதினை பெற்ற அந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் இந்த ஆண்டின் சிறந்த சீரியலாக எங்களது எதிர்நீச்சல் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் எதிர்நீச்சல் சீரியல் இந்த அளவுக்கு மக்களிடம் சென்றடைய மறைந்த நடிகர் மாரிமுத்துதான் காரணம் எனவும், இந்த விருதை அவருக்கு சமர்ப்பிப்பதாக திருச்செல்வம் கூறியுள்ளார். மேலும் விருது கிடைத்த செய்தியை எதிர்நீச்சல் குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.