எண்ணூர் முக துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை டிசம்பர் 17ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எண்ணெய் கழிவு படர்ந்தது குறித்து வழக்கு விசாரணை தீர்ப்பாயத்தில் நடந்தது. அப்போது தீர்ப்பாயம், மணலி தொழிற்சாலை சங்கங்கள் எண்ணையை அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது. சங்கங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தது.