சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சின்னமுத்தூரில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடந்தது. எடப்பாடி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கழக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனிடையே எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை.

அதனால் ஏற்படக்கூடிய வன்முறைகள், கொலைகள் உள்ளிட்ட செய்திகளே டிவியில் வருகிறது. அதிமுக ஆட்சி தமிழ்நாட்டின் பொற்காலமாக இருந்தது. 2 வருடங்களில் சிறப்பான ஆட்சி தந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். எனினும் 2 வருடங்களில் லஞ்சம் மட்டுமே வளர்ச்சி பெற்று உள்ளது. அனைத்து துறையிலும் லஞ்சம் கொடுத்தால் மட்டும்தான் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நிலை இருக்கிறது” என்று பேசினார்.