இந்தியாவை சேர்ந்த அஞ்சு என்ற பெண் முகநூலில் தனக்கு அறிமுகமான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவரை பார்க்க சென்றார். பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய அஞ்சு தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டதோடு நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சமீப நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது அஞ்சுவின் கணவர் அரவிந்த் குமார் தங்கள் இருவருக்கும் சட்டப்படி இன்னும் விவாகரத்து ஆகாததால் அவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ளார். மூன்று வருடத்திற்கு முன்பு விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும் இதுவரை தனக்கு எந்த சமனும் நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை என்று கூறும் அரவிந்த் குமார் அஞ்சு மற்றும் நஸ்ருல்லா மீது புகார் அளித்துள்ளார்.