கடுமையான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும் வாய்ப்பளிக்க வேண்டாம் என்று அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஒருவர் டிவி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இனி வரும் நாட்களில் கடுமையான குற்றம் மற்றும் பயங்கரவாதம் அமைப்புகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பளிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.