கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) எனப்படும் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 205 பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோா் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதே நோயை சரிசெய்வதற்கான தீர்வு என்றும், நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவா், தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.