தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இந்நிலையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது பிற்பகல் ஒரு மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.