சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர், மத்திய அரசு உளவியல் ரீதியாக நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டினார். அத்துடன், பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ இப்படி சோதனை நடத்தியதாக சான்றுகள் இல்லை என்றும், அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்