சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றினால் உலகமே முடங்கியது. கிட்டத்தட்ட 2 வருடங்களாக ஆட்டிப்படைத்த கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உலகமே முடங்கியது. இந்த வைரஸ் தொற்றினால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த கொடிய நோய்க்கு தடுப்பூசி கண்டறியப்பட்ட நிலையில் அதன் பின் தான் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபட்ட வடிவமான XEC Varient தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் தொற்று ஜெர்மனி, இங்கிலாந்து, டென்மார்க், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து உட்பட 27 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு போலந்து மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று பாதித்தால் காய்ச்சல், தொண்டை வலி, உடம்பில் வலி, விடாத இருமல் மற்றும் வாசனை நுகர்வு திறனை இழத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும் இதனை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் இது மிகப் பெரிய அளவுக்கு தீவிரமாக இருக்காது என கூறப்படுகிறது.