மதுரையில் இன்று பிரம்மாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன் தான். மதுரைக்கு முருகனுக்கும் நெருக்கம் அதிகம்.

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன் தான். முருகனின் கடைசி அறுபடை வீடு மதுரையில் இருக்கும் நிலையில் இது மீனாட்சியின் பட்டணமாகும். முருகனின் தந்தை சிவபெருமான் மதுரையில் தான் முதல் சங்கத்திற்கு தலைமை ஏற்றார். இந்த மதுரையில் தான் தாயும் தந்தையும் இருக்கிறார்கள். மகனும் இருக்கிறார்.

அப்படி என்றால் மதுரை மக்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார். மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒரு விஷயத்தை கூறுகிறேன். 14ஆம் நூற்றாண்டில் மீனாட்சி அம்மன் கோவில் மூடப்பட்டிருந்தது இந்த மதுரைக்கு இருண்ட காலம்.

எல்லோரையும் சமமாக பார்ப்பது தான் அறம். இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு தாங்காது. முருகனை ஒரு கூட்டம் சீண்டி பார்க்கும் நிலையில் அறத்தை சோதிக்க அவர்கள் யார். மற்றவர்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்த நீங்கள் யார். உங்கள் மதத்தை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. எனவே இந்து மதத்தை அவமரியாதை செய்யாதீர்கள்.

மேலும் என்னுடைய கடவுளை கேலி செய்துவிட்டு அதனை மதசார்பின்மை என்று கூறுகிறார்கள்.