
கேடி படத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தமன்னா. அதனை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவுடன் வியாபாரி படத்தில் நடித்திருப்பார். அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தது. அதனையடுத்து தனுஷின் படிக்காதவன் படத்தில் நடித்தார். பையா, சிறுத்தை, தில்லாலங்கடி என தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களின் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
View this post on Instagram
இதற்கிடையில் நடிகை தமன்னா விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பாக கிசுகிசுக்கப்பட்டது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் போட்டோவும் இணையத்தில் வைரலானது. அதன் பிறகு தான் அவர்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாக பொதுவெளியில் அறிவித்தார்கள். பின்பு ஜோடியாக வெளியே சுற்ற ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போது தமன்னாவும், விஜய் வர்மாவும் பிரேக்கப் செய்து கொண்ட தாக பாலிவுட் மீடியாக்களில் தொடர்ந்து செய்தி வெளிய வந்து கொண்டிருக்கிறது.
View this post on Instagram
இந்நிலையில் நவராத்திரி திருநாளை முன்னிட்டு நடிகை தமன்னா தனது வீட்டில் மதாபா கி சௌக்கி வழிபாட்டை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா ஆன்மிக உணர்வுடன் பஜனைகளில் கலந்து கொண்டு நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும் பாடகர் ப்ரீட்டி தாண்டன் பதானியா பாடல்கள் பாடிய இந்த நிகழ்ச்சியில் தமன்னா தனது குடும்பத்துடன் சேர்ந்து ஆரத்தி எடுத்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.