
கர்நாடக மாநிலத்தில் பிஷ்டப்பா குடிமணி என்ற 45 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதன் காரணமாக அவருடைய சடலத்தை வீட்டிற்கு உறவினர்கள் கொண்டு வந்தனர். அவருடைய மனைவி ஷீலா அழுது கொண்டே தன் கணவனின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது உங்களுக்கு பிடித்த ஹோட்டல் வந்துவிட்டது நீங்கள் சாப்பிடுகிறீர்களா என்று மனைவி வேதனையுடன் கூற திடீரென அவருக்கு உயிர் வந்துவிட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி உடனடியாக தன கணவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவருக்கு அங்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் அவருடைய இறுதி சடங்கு போஸ்டர்கள் அடிக்கப்பட்ட நிலையில் இறுதி சடங்குக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் மீண்டும் உயிர் பிழைத்தது அதிசயமான ஒன்றாக இருக்கிறது.