
வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. அதனை ரசாக்(28) என்பவர் நடத்தி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரசாக் கூறியதாவது, வேலூரின் பிரபல ரவுடியான வசூர் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் என்னை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினர்.
மேலும் நான் வெளியை செல்லும் போதெல்லாம் என்னை வழி மறித்து பணம் கேட்டு மிரட்டினர். 2 லட்சம் ரூபாய் பணம் கொடுக்காவிட்டால் உயிரோடு நடமாட முடியாது என கொலை மிரட்டல் விடுத்தனர் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகாரின் பெயரில் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பின்பு பணம் கேட்டு மிரட்டிய வசூர்ராஜா, மஞ்சுநாதன், வெங்கடேஷ், முனீர், ஆசிப் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் தான் வசூர்ராஜா ஒரு வழக்கில் இருந்து விடுதலை ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.