
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 13-வது நாளாக உச்சக்கட்ட போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், காஸாவில் 10 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் உத்தரவாதமின்றி இருக்கின்றன என SAVE THE CHILDREN அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், உரிய சிகிச்சைகள் கிடைக்காததால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 50,000 கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் இல்லாமல் தவித்து வருகிவதாக தகவல் தெரிவித்துள்ளது.