திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிஇ வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கொரியர் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று காலை இவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது தொடர்புகொண்ட மர்ம நபர் தன்னை போலீஸ் எஸ்.ஐ என்று கூறி, உன்னுடைய ஆபாச படம் இணையத்தில் கசிந்துள்ளது.

அதனை தடுத்து நிறுத்த ரூ.10,000 பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். உடனே அந்தப்பெண் அந்த நபர் வங்கிக்கணக்கிற்கு ரூ.6,500 அனுப்பியுள்ளார். பின்னர் அந்த மர்மநபர் இளம்பெண்ணின் தந்தையை தொடர்புகொண்டு பணம் கேட்டுள்ளார். இதனையறிந்த அந்த பெண், இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் அவர் போலீஸ் இல்லை என தெரியவந்துள்ளது. அவரை காவல்துறையினர்  தேடி வருகின்றனர்.