இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் விலங்குகளின் வீடியோ என்றாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில் டாக்டர் ஷீத்தல் யாதவ் அடிக்கடி தன்னுடைய வலைதள பக்கத்தில் சில வியப்பான வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அப்படித்தான் தற்போது ஒரு சிம்பன்சி குரங்கின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது ஒரு கூண்டிலிருந்து சிம்பன்சியை சிலர் திறந்துவிடும் நிலையில் அங்கிருந்து சென்ற குரங்கு மீண்டும் திரும்பி வந்து முதலில் ஒருவரை கட்டி அணைத்தது. பின்னர் மற்றொரு பெண்ணையும் அது கட்டி அணைத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது.

நீண்ட நேரமாக மாறி மாறி அந்த பெண்களை கொரில்லா கட்டி அணைத்த நிலையில் பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றது. அதாவது தவறுதலாக வந்த அந்த சிம்பன்சி  குரங்கினை உயிரியல் ஆராய்ச்சியாளர் ஜேன் குடால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீட்ட நிலையில் அதனைப் பின்னர் மீண்டும் காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். மேலும் தனக்கு உதவி செய்த அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த குரங்கு அவ்வாறு செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.