
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே மனிதர்கள் பகுத்தறிவு கொண்டவர்களாக இருந்தாலும் சில நேரங்களில் மனிதர்களின் நடத்தையுடன் ஒப்பிடுகையில் விலங்குகளின் செயல்பாடுகள் நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும்.
அதன்படி மலைக்காடுகளில் வாழும் சிம்பன்சி ஒன்று wildlife photographer ஒருவரிடம் தண்ணீர் அருந்துவதற்கு உதவி கேட்டு உதவியை பெற்ற பிறகு அதன் நன்றி கடன் செலுத்தும் முகமாக அவருடைய கைகளை கழுவி விடுகின்றது. குறித்த சிம்பன்சி தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க