தமிழகத்தில் சமீபத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் உதயநிதி மன்னிப்பு கேட்காவிட்டால் தப்ப முடியாது என்று அயோத்தி துறவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய துறவி, அமைச்சர் உதயநிதி தனது வார்த்தைகளை வாபஸ் பெற்றால் நாமும் நம் எச்சரிக்கையை வாபஸ் பெறுவோம். இல்லையென்றால் அதாள  பாதாளத்தில் ஒளிந்து இருந்தாலும் அவர் எங்களிடமிருந்து தப்ப முடியாது. அவரது தலையை வெட்ட நான் அறிவித்த 10 கோடியை தற்போது 25 கோடியாக உயர்த்தி அறிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.