கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் பகுதியில் கந்த பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தங்கை பார்வதியின் இரண்டாவது மகன் அர்ஜுன் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்தார். நேற்று அர்ஜுன் தனது சித்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் தாய் மாமா கந்த பெருமாள் இறந்து கிடப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கு சென்று பார்த்த போது தலையில் வெட்டு காயங்களுடன் கந்த பெருமாள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது அர்ஜுனின் தாய் பார்வதி உயிரிழந்துவிட்டார். இதனால் அர்ஜுனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டது. அவரது தாய் மாமாவான பெருமாள் அர்ஜுனை மாதம்தோறும் வந்து பார்த்து செல்வது வழக்கம். அவர் அர்ஜுனிடம் பணத்தை கொடுத்து ஹோட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இதனையடுத்து அர்ஜுன் தனது தாய் மாமாவை கொலை செய்து அவரது உடலுக்கு அருகே பூ, பழம், ஊதுவத்தி வைத்து பாயும் விரித்து இரவு முழுவதும் படுத்து தூங்கினார். பின்னர் மறுநாள் காலை எழுந்து தனது சித்திக்கு தகவல் தெரிவித்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் தான் கந்த பெருமாள் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.