தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 18 நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் எனவும் விருப்பம் உள்ளவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது