கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றார். அந்த மூதாட்டி வீட்டின் அருகே உள்ள ஒரு சவுக்கு தோப்புக்கு சென்ற நிலையில் அங்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்களுக்கு சுமார் 35 வயது தான் இருக்கும்.

இவர்கள் அந்த மூதாட்டியை தாக்கிய நிலையில் பின்னர் அனைவரும் சேர்ந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் மூதாட்டி அணிந்திருந்த 3/4 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று சுந்தரவேல் என்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

அதாவது அவர் பதுங்கி இருந்த இடத்திற்கு போலீசார் சென்ற நிலையில் அவர் தப்பி ஓட முயன்றதால் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வாலிபர் தாக்கியதில் இரு போலீஸ்காரர்கள் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளையும் போலீஸார் வீசி தேடி வருகின்றனர்.