திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் மாசிலாமணி என்பவர் மாரியப்பனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதனை தடுக்க வந்த மாரியப்பனின் மகள் பார்வதிக்கும் கத்தி குத்து விழுந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் உயிரிழந்த மாரியப்பனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மாசிலாமணியின் தாய்க்கும் மாரியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனை அறிந்த மாசிலாமணி முதியவரை குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாசிலாமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.