விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு 20 கோடி ரூபாய் ஆகும் என்றால் அதனை விஜயதாரணியிடம் வாங்கி விடுங்கள் என்ற சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், மக்கள் பணத்தில் தானே தேர்தல் நடத்துவீர்கள், என் பணத்தை ஏன் உங்களது பதவி ஆசைக்காக வீணடிக்கிறீர்கள், அப்படி இல்லை என்றால் இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவு ஆகுமோ அதனை ராஜினாமா செய்தவரிடம் வசூலித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.