சென்னை மாநகர பேருந்துகள் நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண்,நேரம் அல்லது பேருந்து நிற்காமல் சென்ற நிறுத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிற்காமல் செல்வதால் பள்ளி மாணவர்கள் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.