ஆற்றின் ஓரமாக சாய்ந்து கொண்டு நின்று தென்னை மரத்தில் சிறுவர்கள் அமர்ந்து ஆட்டம் போட்ட நிலையில் திடீரென்று அது சாய்ந்து ஆற்றுக்குள் விழுந்ததால் அனைவரும் தண்ணீருக்குள் விழுந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதிலும் ரீல்ஸ் மோகத்தில் இணையவாசிகள் செய்யும் செயல் வினோதமாகவே இருக்கிறது.

சமீபத்தில் பெட்ரோல் போடுவதற்கு வந்த இடத்தில் இரு சக்கர வாகனத்தை பெட்ரோலால் குளிக்க வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவர் கைது செய்யப்பட்டார். அந்தவகையில் சில சிறுவர்கள் சாய்வாக இருந்த தென்னை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு ஆட்டம் போட, அது எதிர்பாராதவிதமாக சாய்ந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது. ஆனால் இதில் சிறுவர்கள் எந்த ஒரு காயமும் இல்லாமல் தப்பித்துள்ளார்கள்.