இரண்டு வருடங்களாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் உள்ள டோனட்ஸ் நகரத்தை பீரங்கி குண்டுகள் மூலம் உக்ரைன் தாக்கியுள்ளதாகவும் இதில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.