ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளது. இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதைத்தொடர்ந்து நாளை, காங்கிரஸ், அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். 3 பெரிய கட்சிகள் வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.