
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். முன்னதாக அந்த தொகுதியில் அவருடைய மூத்த மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் உயிரிழந்தார். அதே தொகுதியில் அவருடைய தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தற்போது இவர் இறந்துவிட்டார்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. . பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியா? திமுக போட்டியா? என்ற கேள்விக்கு, “அந்த கேள்வியே எழாது; எங்களுக்குள் ஒரு பிரச்னையும் கிடையாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.