ஈரானி இஸ்ரேல் இடையான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு பெறும் ஆபத்தாக இருக்கும் என்பதால் அந்த திட்டத்தை கைவிடுமாறு இஸ்ரேல் கேட்டது. ஆனால் ஈரான் தொடர்ந்து அணு ஆயுதத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. இதனால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் ராணுவ தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெஹ்ரானில் நடைபெற்ற தாக்குதலில் அலி சட்மானி கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷீத் கொலை செய்யப்பட்டதால் ஜூன் 13-ஆம் தேதி தான் அலி சட்மானி தளபதியாக பொறுப்பேற்றார். தற்போது அவரும் கொலை செய்யப்பட்டதால் ஈரானில் பதற்றம் நிலவுகிறது.