மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு ஓராண்டுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், 100 நாள் வேலை திட்டம் போல இளைஞர்களுக்கான பயிற்சியை சட்டம் ஆக்குவோம். சிறு தொழில் தொடங்க இளைஞர்களுக்கு 5000 கோடியில் ஸ்டார்ட் அப் நிதி உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.