
சென்னை கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளராக இருக்கிறார். இவர் கிண்டியில் உள்ள மடுவங்கரை என்ற பகுதியில் சொந்தமாக ஒரு ஐடி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்தப் பெண் சக்திவேலிடம் 2 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பெண்ணை சக்திவேல் தனியாக அழைத்துள்ளார்.
ஆனால் அந்தப் பெண் மறுத்ததால் கொடுத்த பணத்தை உடனடியாக திரும்பக் கேட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு சக்திவேலை காவல்துறையினர் கைது செய்த சிறையில் அடைத்தனர். அவர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் சில பெண்களுக்கு இப்படி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் இவருடைய லேப்டாப் மற்றும் செல்போனை காவல்துறையினர் தேடும் நிலையில் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் புகார் கொடுக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.