தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023-24 கல்வியாண்டின் பயண அட்டை, பள்ளி அடையாள அட்டை வைத்திருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். அதனைப் போலவே பள்ளி சீருடை உடன் தங்கள் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளிகள் வரை கட்டணம் இன்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.