குமுளியில் தாய்க்கு இறுதி சடங்கு செய்யாத மகன் மற்றும் மகளை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். தாய் இறந்த தகவலை பலமுறை தெரிவித்தும் இருவரும் இறுதி சடங்கிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்ததும் இந்த தாய்க்கு ஊர்மக்கள் உதவியுடன் இறுதி சடங்கு செய்த இடுக்கி மாவட்ட ஆட்சியர் திருமதி ஷீபா ஜார்ஜ் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தாய்க்கு இறுதி சடங்கு செய்யாத மகனும் மகளும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.