80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து தனது அழகால் ரசிகர்களை கட்டிபோட்டவர் நடிகை குஷ்பூ. இவர் கடந்த 2001 ஆம் வருடம் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற மகள்களும் உள்ளனர். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தாமல் வெள்ளிதிரையிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் குஷ்பூ.

இதற்கிடையில் அரசியலிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவரின் கணவர் சுந்தர் சி பேட்டி ஒன்றில், தனக்கு நடிகை சௌந்தர்யாவை மிகவும் பிடிக்கும் என்று அவர் தங்கமான பெண் எனவும் தன்னுடைய வாழ்வில் குஷ்பூ வராவிட்டால் சௌந்தர்யா விடம் காதலை சொல்லி திருமணம் செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.