பிரதமர் மோடியை வரவேற்பதிலும், எதிர்ப்பதிலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். சிதம்பரத்தில் நேற்று பரப்புரையில் ஈடுபட்ட அவர், திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து விமர்சித்தார். அப்போது தொண்டர் ஒருவர், ‘இபிஎஸ் இருந்தால் யூபிஎஸ் தேவையில்லை’ என கோஷமிட்டார். இதைக்கேட்ட அவர், அதிமுகவில் தான் சாதாரண தொண்டர் கூட இப்படி சிந்தனையுடன் விழிப்போடு இருப்பர் என புகழ்ந்து பேசினார்