இபிஎஸ் தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோகி. அவரது சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு தான் என்ற திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி விமர்சித்துள்ளார். 50 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்த என்னை தூக்கி எறிந்து விட்டார். கடந்த தேர்தலில் கூட சீட் கிடைக்கவில்லை. மரியாதை இல்லாத கட்சியில் இருக்கக் கூடாது என்று நினைத்து திமுகவில் இணைந்தேன். இந்த தேர்தலில் திமுக அபார வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.