இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களை பலரும் பயன்படுத்துவதால் அதில் இருக்கும் ஆபத்துக்களை யாரும் உணர்வதில்லை. இந்த நிலையில் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த கலீல் அகமது , சைரன் பானு தம்பதியினருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக அந்த இளைஞர் சிறுமியிடம் பேசுவதை தவிர்த்த நிலையில் மன உளைச்சலில் இருந்த சிறுமி நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.