சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் டிசம்பர் மூன்றாம் தேதி அதாவது இன்று முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். அதில் காலை ஐந்து முதல் பகல் 12 மணி வரை, இரவு எட்டு மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது