தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் அமலில் உள்ள நிலையில் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணிக்கும் மகாலட்சுமி திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது. இதனைத் தொடர்ந்து இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் தங்களுடைய வசிப்பிட முகவரியின் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசு கூறியுள்ளது.