
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் திருவள்ளூரில் தற்போது அந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, சமூக நீதிக்காக பாமக என்ற கட்சியை தொடங்கிய ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். சமூக நீதிப் பற்றி பேசுவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை. சமூக நீதியின் துரோகி தான் திமுக. அடுத்து வரும் 2026 தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டை ஆள்வதற்கு தகுதியுள்ள ஒரே ஒரு கட்சி பாமக தான்.
திருவள்ளூரில் விளையும் 1200 ஏக்கர் நிலத்தை பறித்து அமெரிக்க நிறுவனத்திற்கு தாரை வார்க்க திமுக அரசு முயற்சி செய்கிறது. அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு திருவண்ணாமலையில் உள்ள தரிசன நிலத்தை ஒப்படைக்கலாமே. மேலும் திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டன் இன்று முதல் தொடங்குகிறது என்று கூறினார்.