
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் “₹500 நோட்டு திரும்ப பெறப்படுகிறது” என்ற வதந்திகளைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கியுள்ளது. மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என்றும், ₹500 நோட்டுகள் தொடர்ந்தும் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்றும் RBI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ATM-களில் ₹100 மற்றும் ₹200 நோட்டுகளின் கிடைப்பை அதிகரிக்க வேண்டிய அறிவுறுத்தல், சிறிய மதிப்புள்ள நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டது.
சிறிய நோட்டுகளுக்கு முக்கியத்துவம் – ₹500 க்கு எந்தத் தடையும் இல்லை
ATM-களில் பொதுமக்கள் பெரும்பாலும் ₹500 நோட்டுகளை மட்டுமே பெறும் நிலை, குறைந்த மதிப்புள்ள மாற்றுப் பணம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படுவதை இந்திய ரிசர்வ் வங்கி கவனித்துள்ளது. இதனால் வங்கிகள் மற்றும் ATM ஆபரேட்டர்களை, ₹100 மற்றும் ₹200 நோட்டுகளை அதிகம் வழங்குமாறு RBI அறிவுறுத்தியது. ஆனால் இது ₹500 நோட்டை குறைக்கும் முயற்சி அல்ல, என்றும், அந்த நோட்டு மீதான அச்சிடும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
UPI வழி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ச்சி – ₹2,000 நோட்டு புழக்கத்தில் இல்லை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ₹2,000 நோட்டுகள் தற்போது கிட்டத்தட்ட புழக்கத்தில் இல்லையே என்பதை உறுதிப்படுத்தினார். “₹2,000 நோட்டுகள் தற்போது 0.02% மட்டுமே வெளியிலுள்ளது,” என்றார். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வருவதையும் கூறினார். 2024 டிசம்பரில் மட்டும் ₹23.25 லட்சம் கோடி மதிப்பிலான 16.73 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 46% அதிகமாகும். மக்களுக்கு டிஜிட்டல் பரிமாற்றங்களில் நன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.