தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து தவணைகளாக மொத்தம் 14000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்குப் பதிலாக மூன்று தவணைகளாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கர்ப்ப காலத்தின் 4ஆவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த 4 ஆவது மாதத்தில் ரூ.6,000, 9ஆவது மாதத்தில் ரூ.2,000 என ரூ.14,000 ரொக்கமாக வழங்கப்படும். மேலும் 3, 6ஆவது மாதங்களில் இரண்டு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது