கோவை அருகே அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்கோவிலில் சிவலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் கடந்த சில மாதங்களில் மலையேறும் போது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலை ஏறி செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதாவது மலையேறும் பக்தர்கள் முழு உடல் பரிசோதனை செய்த பிறகு மலையேற அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் குழுவாகவும் வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும், மாற்றுப் பாதையில் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது