தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை கணக்கிடுவதில் மாறுபாடு நிகழ்ந்தது ஏன் என்று தேர்தல் அதிகாரி சாகு முதல்முறையாக விளக்கமளித்துள்ளார். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால் தவறு ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் செயலியில் கிடைத்த தகவலை அறிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.