பிரபல உள்நாட்டு விமான நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது பயணிகள்  20 நிமிடங்கள் இலவசமாக வைஃபை கனெக்ட் செய்து  பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இணைய சேவைகளை பெற வாடிக்கையாளருக்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவைகள் கோயிங் 787-9 ட்ரீம்லைனர் மற்றும் ஏப்ரல் 321 நீயோ விமானங்களில் மட்டும் செயல்படுத்தியுள்ளனர்.

இந்த சேவையை பயன்படுத்த பயணிகளின் ஈமெயிலுக்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பப்படும். மேலும் இந்த சேவையை 20 நிமிடங்களுக்கு மேலும் பயன்படுத்த குறிப்பிட்ட திட்டங்களை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும். விமான பயணத்தை வசதியாக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு 3 விதமான பிளான்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வைஃபை சேவையை நீடித்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது. விஸ்தாராவின் இத்திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விமான டிக்கெட் அதிகமாக இருப்பது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர்களை கவரும் நோக்கத்தில் இந்த திட்டத்தை  அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் முதன் முறையாக வைஃபை வசதியை அந்நிறுவனம் அறிமுகம் படுத்தியது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.