
இந்தியாவைப் பொறுத்த வரையில் வனவிலங்குகளால் உயிரிழப்போருக்கு அரசு சார்பில் கருணைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வனவிலங்குகளால் உயிரிழந்தால் 5 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறைப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ரயிலில் யானைகள் அடிப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்ட அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.