அண்மையில் நாட்டையே உலுக்கிய பயங்கரமான பாலசோர் ரயில் விபத்து குறித்த விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து ரயிலை கட்டுப்படுத்தும் பொறிமுறைகள், ரிலே குடிசைகள் ஹவுசிங் சிக்னலிங், லெவல்-கிராஸிங்குகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பாயிண்ட், டிராக் சர்க்யூட் சிக்னல்கள் என சிக்னல் கருவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய ரயில்வே வாரியமானது உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி ரயில்வே வாரியமானது ரிலே அறைகளுக்கு இரட்டை பூட்டை போடவேண்டும் என உத்தரவிட்டது. அந்த வகையில் ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக ரயில்களுக்கு சிக்னல் வழங்கும் பேனல் அறைகளுக்கு இரட்டை பூட்டு போட முடிவுசெய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.