சமீபத்தில் ரெடிட் தளத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ரெடிட் பயனர், தனது அம்மாவுக்கு ChatGPT-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு, அவர் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டார். அந்த அம்மா, தண்ணீர் பாட்டிலை ஃபிரிட்ஜில் வைக்க மறந்த மகனை திட்டுவதற்காக ChatGPT-ஐ பயன்படுத்தியதாக அந்த பயனர் கூறுகிறார்.

அந்த மெசேஜ் பின்வருமாறு:

“நீ தண்ணீர் பாட்டிலை நிரப்பி ஃபிரிட்ஜில் வைக்கவில்லையா? எத்தனை முறை சொன்னேன் – நீ குடித்த பிறகு அதை மீண்டும் நிரப்பி வைக்க வேண்டும். இவ்வளவு கவனக்குறைவா? பொறுப்புடன் நடந்துக்கொள்.”

அந்த மெசேஜின் கடைசி வரி – “மென்மையான பதிப்பு வேணுமா? கடுமையான பதிப்பு வேணுமா?” என AI-ஐப் போல சொல்லப்பட்டிருந்தது! இதைக் கண்ட நெட்டிசன்கள் வெகுவாக ரசித்தனர்.

இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் விரைவில் வைரலாகியது. “அம்மாக்கள் ChatGPT-யைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டதுமே, நம்மால் தப்பிக்கவே முடியாது!” என்று ஒருவர் எழுதினார். இன்னொருவர், “இனிமேல் ChatGPT கூட நம்மையும் திட்டும் போது அம்மாக்கள் பின்புலத்தில் இருப்பாங்க!” என்று நக்கல் செய்தார்.